/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
598 மாணவ, மாணவியருக்கு லேப்-டாப் வழங்கிய அமைச்சர்
/
598 மாணவ, மாணவியருக்கு லேப்-டாப் வழங்கிய அமைச்சர்
ADDED : பிப் 08, 2026 06:40 AM
காங்கேயம்: காங்கேயம் அருகே மாணவ, மாணவியருக்கு அமைச்சர் லேப்-டாப் வழங்கினார்.
காங்கேயத்தை அடுத்த நத்தக்காடையூர், காங்-கேயம் தொழில் நுட்பக்கல்லுாரியில், உலகம் உங்கள் கையில் திட்டத்தில், காங்கேயம் பகுதி கல்வி நிறுவனங்களில் பயிலும், 598 மாணவ, மாணவியருக்கு, 2.45 கோடி ரூபாய் மதிப்பிலான லேப்-டாப்புகளை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்-தித்துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார். நிகழ்ச்சியில் காங்கேயம் கல்வி நிறுவன தாளாளர் ஆனந்த வடிவேல், தி.மு.க., ஒன்றிய செயலாளர் கருணை பிரகாஷ், கல்லுாரி பேராசி-ரியர்கள் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது: உயர் கல்-வித்துறை சார்பில், அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அரசு கல்லுாரி மாணவர்களிடையே காணப்படும் டிஜிட்டல் தொழில் நுட்ப அணுகல் மற்றும் திறன் வேறுபாட்டை குறைப்பதே இத்திட்டத்தின் முக்-கிய நோக்கம். குறிப்பாக பொருளாதார மற்றும் சமூக ரீதியாக பின் தங்கிய மாணவர்கள், தொழில்நுட்ப உலகில் பின்தங்காமல் இருக்க, சம வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், இத்-திட்டத்தில் முதல் கட்டமாக, 10 லட்சம் மடிக்க-ணினி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.

