/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நீர் செறிவூட்டல் திட்டப்பணி தொடங்கி வைத்த அமைச்சர்
/
நீர் செறிவூட்டல் திட்டப்பணி தொடங்கி வைத்த அமைச்சர்
நீர் செறிவூட்டல் திட்டப்பணி தொடங்கி வைத்த அமைச்சர்
நீர் செறிவூட்டல் திட்டப்பணி தொடங்கி வைத்த அமைச்சர்
ADDED : டிச 09, 2025 10:15 AM

காங்கேயம்: காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் பாலசமுத்திரம்-புதுார், கத்தாங்கண்ணி, கணபதி பாளையம் ஊராட்சிகளில், நொய்யல் ஆற்றில் இருந்து நீர் செறிவூட்டல் திட்டத்தில், 5.24 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப்பணி தொடக்க விழா நேற்று நடந்தது. திருப்பூர் கலெக்டர் மனிஷ் நார-ணவரே தலைமை வகித்தார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
இந்த ஊராட்சிகளில் உள்ள ராமலிங்க தோட்ட குட்டை, சீராதோட்டம் தடுப்பணை, கோயத்-தோட்டம் தடுப்பணை 1 மற்றும் 2, அய்யனாரப்பன் குட்டை, ஜல்லிமேடு புதிய தடுப்பணை 1, 2, 3, தெற்கு தோட்ட தடுப்பணை, முனியப்பன் கோவில் தடுப்பணை 1, 2, மனக்காட்டு குட்டை, மனக்காட்டு தடுப்பணை, தமலான் தோட்ட குட்டை, சிவகிரி முனியப்பன்கோவில் தடுப்-பணை, கோடாங்கி காடு தடுப்பணை, பார்வதிகாடு தடுப்பணை, வெள்ளியங்காடு
தடுப்பணை, வார-னாசிகாட்டு குட்டை 1, 2 என, 20 எண்ணிக்கையி-லான குளம், குட்டை மற்றும் தடுப்பணைகளில் நொய்யல் ஆற்றில் மழை காலங்களில் வரும் உபரி நீரை ஆற்றுப்படுகை கிணற்றிலிருந்து நீரேற்ற முறையில் கொண்டு சென்று நிரப்பப்-படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

