/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெள்ளகோவில் நகராட்சி வளர்ச்சி திட்டப்பணிகள்; அமைச்சர் ஆய்வு
/
வெள்ளகோவில் நகராட்சி வளர்ச்சி திட்டப்பணிகள்; அமைச்சர் ஆய்வு
வெள்ளகோவில் நகராட்சி வளர்ச்சி திட்டப்பணிகள்; அமைச்சர் ஆய்வு
வெள்ளகோவில் நகராட்சி வளர்ச்சி திட்டப்பணிகள்; அமைச்சர் ஆய்வு
ADDED : அக் 08, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், வெள்ளகோவில் நகராட்சி பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் வெள்ளகோவிலில் நேற்று நடந்தது.
நகராட்சி தலைவர் கனியரசி முத்துக்குமார், மண்டல இயக்குநர் (நகராட்சி நிர்வாகம்) ராஜராம், நகராட்சி கமிஷனர் மனோகரன், நகராட்சி பொறியாளர் குணசீலன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விபரங்களை கேட்டறிந்த அமைச்சர், நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.