ADDED : ஜூலை 26, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, பெருந்துறையை சேர்ந்தவர் ராஜம்மாள், 54; கணவர் இறந்து விட்டார். இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ஆப்பக்கூடலில் உள்ள இரண்டாவது மகள் வீட்டுக்கு கடந்த, 13ம் தேதி வந்தார். கடந்த, ௧௭ம் தேதி அருகிலுள்ள கருப்புசாமி கோவிலுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
மகள் புகாரின்படி ஆப்பக்கூடல் போலீசார் தேடி வந்தனர். பவானி அருகே திப்பிசெட்டிபாளையம் பவானி ஆற்றில், ராஜம்மாள் சடலம் நேற்று மிதந்தது. பவானி போலீசார் உடலை மீட்டு, பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.