நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, சூரம்பட்டியை சேர்ந்தவர் பர்கத், 39; ஈரோடு பஸ் ஸ்டாண்டில் பூ கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று முன்-தினம் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். கடை டேபிளில் வைத்திருந்த மொபைல்போனை, ஒரு ஆசாமி திருடிக்-கொண்டு ஓட்டம் பிடித்தார். அவர் சத்தமிடவே, அக்கம்பக்கத்-தினர் ஆசாமியை மடக்கிப்பிடித்து, ஈரோடு டவுன் போலீசில் ஒப்-படைத்தனர். கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த மஞ்சுநாத், 36, என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, மொபைல்போனை பறிமுதல் செய்தனர்.