ADDED : ஏப் 12, 2026 06:13 AM
ஈரோடு, மொடக்குறிச்சி தொகுதி பா.ஜ., வேட்பாளர் கிருத்திகா சிவக்குமார், அறச்சலுார் பேரூராட்சி ரவுண்டானா பகுதி, பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி, கிராமங்களில், நேற்று காலை தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். மாலையில் கொடுமுடி எல்லையூர், சின்னாகண்டனுார், ஏமகண்டனுார், சுல்தான்பேட்டை, பழைய பஸ் ஸ்டாண்ட், புது பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, வடக்கு தெரு, மேற்கு அக்ரஹாரம், மணிகூண்டு, கிழக்கு அக்ரஹாரம், இழுப்புதோப்பு, ஈஸ்வரன் கோவில் வீதி, கரிக்கடை தெரு, மலையம்மன் கோவில், தழுவம்பாளையம், வெள்ளியனை காட்டூர், அரசம்பாளையம், பள்ளகாட்டூர், நகப்பாளையம், ஆண்டிக்காடு, நகப்பாளையம் காலனி, கணபதி பாளையம், சூளைக்கல் பாளையம், க.ஒத்தக்கடை பகுதிகளில், பா.ஜ., சின்ன மான தாமரைக்கு ஓட்டளிக்க வலியுறுத்தினார்.
விவசாயிகள், விவசாய தொழிலாளர், பெண்கள், தொழிலாளர் உள்ளிட்டோரிடம் பிரதமர் மோடியின் திட்டங்கள், இ.பி.எஸ்.,சின் தேர்தல் வாக்குறுதிகளை விளக்கி, பிரசாரத்தில்
ஈடுபட்டார்.
