ADDED : ஜூலை 23, 2026 06:01 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:இந்தியா
மற்றும் அமெரிக்கா இடையே, 'பிரீ டிரேட் அக்ரிமென்ட்' கையெழுத்து ஆவதை
எதிர்த்து நேற்று மா.கம்யூ., கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
சார்பில், பிரதமர் மோடி, அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஆகியோர் உருவ
பொம்மைகளை எரிக்கும் போராட்டம் அறிவித்தனர்.
இதன்படி,
சத்தியமங்கலம் பெரியகுளம், அந்தியூர் வேதகாரன்குட்டை, உக்கரம்
உட்பட 5 இடங்களில் மோடி மற்றும் டிரம்ப் ஆகியோரின் உருவ பொம்மைகளை
எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க
மாவட்ட செயலர் முனுசாமி தலைமையில் கவுந்தப்பாடி பகுதியிலும் உருவ
பொம்மைகளை எரித்தனர்.
