/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மே மாத சராசரியை விட ஒரு மடங்கு கூடுதல் மழை
/
மே மாத சராசரியை விட ஒரு மடங்கு கூடுதல் மழை
ADDED : மே 28, 2024 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி : கோபி தாலுகாவில், மே மாத சராசரியை விட, ஒரு மடங்கு மழை கூடுதலாக மழை பெய்துள்ளது.ஈரோட மாவட்டம் கோபி தாலுகாவில், மாத சராசரி மழையளவு கணக்கிடப்பட்டுள்ளது.
இதன்படி ஜன., 18.5 மி.மீ., பிப்., 14.5, மார்ச், 21.6, ஏப்., 54.9 மி.மீ., மழை பெய்ய வேண்டும். இந்த நான்கு மாதங்களில் ஒரு நாள் கூட மழை பெய்யவில்லை. நடப்பு மே மாதத்தில், கடந்த ஒன்பது நாட்களில் மட்டும், 199.4 மி.மீ., மழை பெய்துள்ளது. மே மாத சராசரி மழை, 90.4 மி.மீ., ஆகும். அதை கடந்து, 109 மி.மீ., மழை கூடுதலாக மழை பெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.