/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இ.கம்யூ., கூட்டத்தில் எம்.பி., பங்கேற்பு
/
இ.கம்யூ., கூட்டத்தில் எம்.பி., பங்கேற்பு
ADDED : பிப் 17, 2025 03:05 AM
பெருந்துறை: இ.கம்யூ., கட்சி நுாற்றாண்டு விழாவையொட்டி, பெருந்துறை ஒன்றிய பேரவைக் கூட்டம், பெருந்துறையில் நேற்று நடந்தது. சிறப்பு அழைப்பாளராக திருப்பூர் எம்.பி. சுப்பராயன் கலந்து கொண்டு பேசினார்.
பெருந்துறை, குன்னத்துார் நான்குரோடு சந்திப்பில் போக்குவ-ரத்து நெருக்கடியை தவிர்க்க, அண்ணா சிலை முதல் பழைய பஸ் ஸ்டாண்ட் வரையிலான சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை முழு-மையாக அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டும். அல்லது பெருந்துறை புது பஸ் ஸ்டாண்ட் முதல் அண்ணா சிலை வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும். ஈரோடு அரசு மருத்-துவ கல்லுாரி மருத்துவமனையை பல்நோக்கு சிறப்பு மருத்துவம-னையாக தரம் உயர்த்த வேண்டும் என்பது உட்பட பல தீர்மா-னங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

