/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாத்திர கடையில் புகுந்து மர்ம நபர்கள் கைவரிசை
/
பாத்திர கடையில் புகுந்து மர்ம நபர்கள் கைவரிசை
ADDED : பிப் 19, 2026 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே பாத்திர கடையில் புகுந்து, 26 கிலோ பித்தளை பொருட்களை மர்ம நபர்கள் களவாடி சென்றனர்.
கோபி அருகே மொடச்சூரை சேர்ந்தவர், காளிதாஸ், 43. பாத்-திரம் மற்றும் பழைய பொருட்கள் வியாபாரம் செய்கிறார். இவரது கடையை நேற்று திறந்து பார்த்தபோது, 26 கிலோ பித்தளை பாத்-திரங்கள் மற்றும் ஒரு காஸ் சிலிண்டர் களவு போயிருப்பது தெரிய-வந்தது. இதுகுறித்து கடையில் உள்ள, 'சிசிடிவி' பதிவுகளை பார்த்தபோது, இருவர் பொருட்களை களவாடி கொண்டு, டி.வி.எஸ்., எக்சல் மொபட்டில் செல்வது தெரியவந்தது. இதுகு-றித்து காளிதாஸ் கொடுத்த புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்-கின்றனர்.

