ADDED : அக் 17, 2024 01:18 AM
போதை மாத்திரை; 9 பேர் கைது
ஈரோடு, அக். 17-
வீரப்பன்சத்திரம் போலீசார், ஈரோடு, நாராயணவலசு, இந்திரா நகர் வாய்க்கால் மேடு பகுதியில், நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்ற ஐந்து பேரை பிடித்து விசாரித்தனர். போதைக்கு பயன்படுத்தவும், விற்கவும் வைத்திருந்த, 20 வலி நிவாரணி மாத்திரை, 20 சிரிஞ்சுகளை கைப்பற்றினர். இது தொடர்பாக வீரப்பன்சத்திரம், கே.வி.பி.சந்து பகுதி நவீன் குமார், 21; பெரியவலசு, பாரதி வீதி கவுதம், 22; பெரியவலசு திலகர் வீதி பாஸ்கர், 28; நாமக்கல் மாவட்டம் பரமத்தி, மேலபட்டி சிதம்பரம், 27, ஹரீஷ், 22; என ஐந்து பேரை
கைது செய்தனர்.
இதேபோல் பெரியசேமூர், கல்லன்கரடு ஆலமரம் பஸ் நிறுத்த பகுதியில், 20 வலி நிவாரணி மாத்திரைகள், 20 சிரிஞ்சுகளுடன், ஈரோடு கனிராவுத்தர்குளம், பாபு மகள் சமீம் பானு, 20; தர்மராஜ் மகள் இந்துமதி, 20; ஈரோடு, மாணிக்கம்பாளையம் ரோடு நேதாஜி நகர் பத்திரகாளியம்மன் கோவில் வீதி சந்தியா, 23; பெரிய சேமூர் கல்லன்கரடு விக்னேஷ், 27, என நான்கு பேரை கைது செய்தனர்.

