/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புதிய ரேஷன் கடைகள், கூட்டுறவு கட்டடம் திறப்பு
/
புதிய ரேஷன் கடைகள், கூட்டுறவு கட்டடம் திறப்பு
ADDED : மார் 12, 2026 04:39 AM

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய கூட்டுறவு அலுவலக கட்டடம், புதிய முழு நேர ரேஷன் கடைகள் திறக்கப்-பட்டன.
ஈரோடு மூலப்பாளையம் என்.ஜி.ஜி.ஓ., நகர், விநாயகர் கோவில் வீதியில், புதிய முழு நேர ரேஷன் கடையை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்து-சாமி திறந்து வைத்து, கார்டுதாரர்களுக்கு பொருட்களை வழங்-கினார். இக்கடை, 350 ரேஷன் கார்டுதாரர்களுடன் பகுதிநேர ரேஷன் கடையாக வாரத்தில் வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் செயல்பட்டு வந்து, தற்போது, 804 கார்டுதாரர்களுடன் முழு நேர கடையாக செயல்பாட்டுக்கு
வந்துள்ளது.
லக்காபுரம் புதுார், சுப்பராயவலசு புதிய முழு நேர ரேஷன் கடைகள், மொடக்குறிச்சி ஈஞ்-சம்பள்ளி கிளை புதிய கூட்டுறவு அலுவலக கட்டடம், கொடுமுடி சாலைப்புதுார் புதிய கூட்டுறவு அலுவலகம் உட்பட பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்து, மகளிர் குழுவினருக்கு கடனுதவி வழங்கினார்.ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., சந்திரகுமார், கூட்டுறவு சங்கங்-களின் மண்டல இணை பதிவாளர் கந்தராஜா, துணை பதிவாளர் பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

