ADDED : ஆக 04, 2026 03:47 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; தமிழ்நாடு அரசு நர்ஸ்கள் சங்கம் சார்பில், தமி-ழக அளவில் மூன்று அம்ச கோரிக்கையை வலியு-றுத்தி, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கோரிக்கை அட்டை அணிந்து நேற்று பணி செய்-தனர். மாநில துணை தலைவர் சகிலா தலைமை வகித்தார். அரசு நர்ஸ்களுக்கு பணி நிரவல் உத்த-ரவை ரத்து செய்ய வேண்டும்.
செவிலியர் என்ற பதவியை செவிலியர் அலு-வலர் என மாற்றம் செய்ய வேண்டும். தொகுப்பூ-திய முறையை முற்றிலும் ரத்து செய்து, கால-முறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்-கைகளை வலியுறுத்தி, கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்தனர். ஈரோடு அரசு மருத்து-வமனையில் கிளை தலைவர் உஷா, நிர்வாகிகள் பிரீத்தா, அருண்குமார், மெர்சி உட்பட பலர் போராட்டத்தை ஒருங்கிணைத்தனர். மாவட்ட அளவில், 600க்கும் மேற்பட்ட நர்ஸ்கள் இதில் ஈடு-பட்டனர்.
