ADDED : ஜூன் 15, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, பவானி, பழனியாண்டவர் கோவில் வீதியை சேர்ந்தவர் புண்ணியகோடி, 42; தனக்கு சொந்தமான மாருதி ஆம்னி வேனை, வீட்டுக்கு எதிரே நேற்று மதியம் நிறுத்தியிருந்தார். இந்நிலையில் மாலையில் திடீரென வேன் தீப்பிடித்து எரிந்தது.
இதுகுறித்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தரப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீப்பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.