ADDED : மே 03, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு, ரங்கம்பாளையம் அருகே செல்லும் தண்டவாளத்தில் ஆண் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடந்தார். ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், ரயில்வே தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த ரயில் மோதி இறந்திருக்கலாம் என அறிந்தனர்.
இவர் யார் என தெரியவில்லை. நீல நிற டீ-ஷர்ட், அடர் சிவப்பு நிற பேன்ட் அணிந்திருந்தார்.
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஈரோடு ரயில்வே போலீசார்
விசாரிக்கின்றனர்.