நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்:தாராபுரம்
சின்னக்காம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட தண்ணீர் பந்தலில்,
250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்-கின்றனர். இவர்கள் ரேஷன்
பொருட்கள் வாங்க, 3 கி.மீ., துாரத்தில் உள்ள சிக்கினாபுரத்துக்கு
செல்கின்றனர். இதனால் தங்கள் ஊருக்கு பகுதி நேர ரேஷன் கடை திறக்க கோரிக்கைவைத்திருந்தனர்.
இந்நிலையில்
தண்ணீர்பந்தலில், பகுதி நேர ரேஷன் கடையை, அமைச்சர் கயல்விழி நேற்று
திறந்து வைத்தார். இதேபோல் மாந்-தியாபுரம், கிருஷ்ணாபுரம் உள்பட
மேலும் ஐந்து இடங்களில், புதிய ரேஷன் கடைகளை அமைச்சர் கயல்விழி திறந்து
வைத்தார்.

