ADDED : நவ 08, 2025 04:59 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:பவானிசாகர்
அணை யில் இருந்து காளிங்கராயன் வாய்க்கால் மூலம், ஈரோடு,
மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுகாக்களில், 15,743 ஏக்கர் நிலங்கள்
பாசன வசதி பெறுகின்றன.
காளிங்கராயன் இரண்டாம் போக பாசனத்துக்கு
வரும், 10ம் தேதி முதல் மார்ச், 9ம் தேதி வரை, 120 நாட்களுக்கு, 5,184
மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு
உத்தரவிட்டுள்ளது.
