ADDED : செப் 06, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:விருதாசலத்தில்
இருந்து ஈரோடு கூட்ஸ் ஷெட்டுக்கு சரக்கு ரயிலில் நேற்று, 2,000 டன் நெல்
வந்தது. சுமை தொழிலாளர்கள் ரயிலில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றி,
நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து தனியார் அரவை ஆலைகளுக்கு அரவைக்கு அனுப்பி
அரிசியாக்கப்பட்ட பின், ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வினியோகம்
செய்யப்படும்.
