ADDED : ஜூலை 13, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், திருச்சி, அய்யப்பன் நகரை சேர்ந்தவர் நேச ராசா, 32; வெள்ளகோவிலில் தங்கி பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், 10 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர், அக்கம்பக்கத்தினர் நேசராசாவை பிடித்து காங்கேயம் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணைக்கு பிறகு போக்சோ வழக்கில் கைது செய்து, காங்கேயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.