/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காகித ஆலை தொழிலாளி வாகனம் மோதியதில் பலி
/
காகித ஆலை தொழிலாளி வாகனம் மோதியதில் பலி
ADDED : ஜன 24, 2026 05:53 AM
புளியம்பட்டி: பவானிசாகர் அருகே வாகனம் மோதியதில் காகித ஆலை தொழிலாளி உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்-தவர் ராமச்சந்திரன், 35; பவானிசாகரை அடுத்த நெரிஞ்சிப்பேட்டையில் குடும்பத்துடன் தங்கி, அதே பகுதியில் ஒரு காகித தொழிற்சாலையில் ஆப்பரேட்டராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்-டுக்கு சென்றார். கொக்கரக்குண்டி ராஜீவ் நகர் அருகே சென்ற-போது, எதிரே வந்த பொலிரோ வாகனம் டூவீலர் மீது மோதியது. துாக்கி வீசப்பட்ட ராமச்சந்திரன் சம்பவ இடத்தில் பலியானார்.
பொலீரோ டிரைவரான அசோக்குமாரிடம், 45, பவானிசாகர் போலீசார் விசாரணை நடத்தி வரு-கின்றனர்.
விபத்தில் பலியான ராமச்சந்திரனுக்கு மனைவி நாகலட்சுமி, 27, ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.

