ADDED : செப் 24, 2024 02:57 AM
அ நிறம் | அளவு
கோபி: கோபி போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன், நேற்று ரோந்து சென்றார். சத்தி சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக நின்றிருந்த ஒரு சரக்கு வேனுக்கு, ௧,௦௦௦ ரூபாய் அபராதம் விதிக்க அவர் உத்தரவிட்டார்.
இதேபோல் போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து கோபி மார்க்கெட் சாலை, கச்சேரிமேடு, எம்.ஜி.ஆர்., சிலை
பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்றிருந்த, 56 வாகன ஓட்டிகளுக்கு, தலா, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
