/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'பறந்த' தனியார் பஸ்சை சிறைபிடித்த மக்கள்
/
'பறந்த' தனியார் பஸ்சை சிறைபிடித்த மக்கள்
ADDED : பிப் 17, 2025 03:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த மங்களாம்பாளையம் பஸ் நிறுத்தத்தில், பழனி செல்வதற்காக பயணிகள் நேற்று காலை நின்றிருந்தனர்.
அப்போது வந்த ஒரு தனியார் பஸ் நிற்காமல் சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள், மாலை, 6:00 மணியளவில் திரும்பி தாராபுரம் வந்த பஸ்சை சிறைபிடித்தனர். பஸ் முன் அமர்ந்து தர்ணா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தாராபுரம் போலீசார் மக்-களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, கலைந்து சென்-றனர்.

