sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோவில் கட்டுமானத்தை அனுமதிக்க வேண்டும் கலெக்டர் ஆபீசில் கவுந்தப்பாடி மக்கள் மனு

/

கோவில் கட்டுமானத்தை அனுமதிக்க வேண்டும் கலெக்டர் ஆபீசில் கவுந்தப்பாடி மக்கள் மனு

கோவில் கட்டுமானத்தை அனுமதிக்க வேண்டும் கலெக்டர் ஆபீசில் கவுந்தப்பாடி மக்கள் மனு

கோவில் கட்டுமானத்தை அனுமதிக்க வேண்டும் கலெக்டர் ஆபீசில் கவுந்தப்பாடி மக்கள் மனு


ADDED : ஏப் 29, 2025 02:17 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:கவுந்தப்பாடியை சேர்ந்த சரவணன் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்கி கூறியதாவது: கவுந்தப்பாடி சந்தைப்பேட்டையில் ஐயப்ப பக்தர்கள், மக்கள் சார்பில் ஆறு மாதங்களுக்கு முன், ஸ்ரீதர்ம சாஸ்தா கோவில் அமைக்க திருப்பணி துவங்கினர். அப்பகுதி ம.தி.மு.க., ஒன்றிய செயலர் வீரகுமார், கோவில் கட்ட தடை விதிக்குமாறு, கலெக்டர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பி கட்டுமானத்தை நிறுத்தினார். நாத்திகவாதிகள் சிலரும், சில அமைப்புகளும் சேர்ந்து இப்பணி நடக்கவிடாமல் தடுக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் விசாரித்து, கட்டுமான பணி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் கட்டுமிடம் போக்குவரத்து பாதிப்பு, தனி நபர்களுக்கு இடையூறு இல்லாத இடமாகும். எனவே தடையை நீக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

இதே பிரச்னை தொடர்பாக, ஈரோடு மேற்கு மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர் சிவசக்தி தலைமையில் மற்றொரு மனு வழங்கினர். அதில், 'கவுந்தப்பாடியில் சாலை ஓரம், ஓடை பள்ளத்தில் வீரகுமார் என்பவர், ஆக்கிரமிப்பு செய்து கட்டுமான பணி செய்து வருகிறார். இவ்விடம் நீர் நிலை புறம்போக்கு, நீர் வழிப்பாதையாக உள்ளது. இதுபற்றி மாவட்ட நிர்வாகம் விசாரித்து, நில அளவீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்விடத்தில் வீடு கட்டப்பட்டால், நீர் வழிப்பாதை தடைபடும்' என்று தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us