/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'ஓவர் டேங்க்கில் ஏறி அட்ராசிட்டி' ஆசாமியை அனுப்பி வைத்த மக்கள்
/
'ஓவர் டேங்க்கில் ஏறி அட்ராசிட்டி' ஆசாமியை அனுப்பி வைத்த மக்கள்
'ஓவர் டேங்க்கில் ஏறி அட்ராசிட்டி' ஆசாமியை அனுப்பி வைத்த மக்கள்
'ஓவர் டேங்க்கில் ஏறி அட்ராசிட்டி' ஆசாமியை அனுப்பி வைத்த மக்கள்
ADDED : பிப் 15, 2025 05:37 AM
சென்னிமலை: சென்னிமலை யூனியன் சிறுக்கழஞ்சி ஊராட்சி, காளிபாளை-யம்-பாப்பம்பாளையம் ரோட்டில், ஊராட்சிக்கு சொந்தமான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. தொட்டி மீது ஏறி தக-ராறு செய்வது, தண்ணீருக்குள் இறங்கி குளிப்பது, மக்களை விரட்டுவது போன்ற செயலில் ஆசாமி ஒருவர் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல் டேங்க்கில் ஏறி அட்டூழியம் செய்தார். இதுகுறித்து மக்கள் தகவலின்படி, சென்னிமலை தீய-ணைப்பு நிலைய அலுவலர் பூபதிராஜ் தலைமையில் சென்ற வீரர்கள், தொட்டி மீது ஏறி வாலிபரை மீட்டனர்.
விசாரித்ததில் திருப்பத்துார் மாவட்டம் புளியங்குட்டை பகு-தியை சேர்ந்த ஜான் புஷ்பராஜ், 47, திருப்பூரில் பனியன் நிறுவ-னத்தில் டைலராக பணியாற்றுவது தெரிந்தது. சிறிது மன நல குறைபாடு இருந்ததால், அவரை வேலையில் இருந்து நிறுத்தியுள்-ளனர். அங்கிருந்து வந்தவர் அப்பகுதியில் சுற்றித்திரிந்து தொட்-டியில் ஏறி அட்ராசிட்டி செய்வது தெரிந்தது. ஊர்மக்கள் சார்பாக பணம் கொடுத்து, சொந்த ஊருக்கு பஸ் ஏற்றி அனுப்பினர்.

