/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
/
மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 27, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: மத்திய அரசு பட்ஜெட்டில், மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்-கீடு நிதி குறைவாக உள்ளதை கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடந்து வருகி-றது.
அந்த வகையில் அந்தியூர் தாலுகா அலுவலக முன்புறம், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது-காப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்-பாட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் முருகேசன் தலைமையில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதேபோல் ஈரோட்டில், நகர செயலாளர் செந்தில்குமார் தலை-மையில், மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பொருளாளர் ராஜூ பேசினர்.

