/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெருந்துறை -சாகர் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
பெருந்துறை -சாகர் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
பெருந்துறை -சாகர் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
பெருந்துறை -சாகர் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : ஜன 22, 2026 04:40 AM

பெருந்துறை: பெருந்துறை, சாகர் இண்டர்நேஷனல் பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் செளந்திரராசன் தலைமை வகித்து பேசுகையில்,'' எங்கு சென்றாலும், எவ்வளவு உயரம் அடைந்-தாலும், இந்த பள்ளி, உங்கள் வேராக இருக்கும், நீங்கள் இந்த பள்ளியின் வாழும் பெருமை. பள்ளி உங்கள் அடையாளமாக என்றும் விளங்கும். உங்கள் வாழ்க்கை இன்னும் உயர வேண்டும். நீங்கள் நல்ல மனிதர்களாக வாழ வேண்டும்,'' என்றார். முன்னதாக முதல்வர் ஷீஜா வரவேற்றார். நிகழ்ச்சியில், பல ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் படித்த முன்னாள் மாண-வர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், பள்ளி கல்வி இயக்குனர் ஐசக் பிரபு குமார், தமிழாசி-ரியர் சிவக்குமார், பள்ளி மாணவர் சங்க முன்னாள் தலைவர் அபிநேஷ் பரத், மாணவர் சங்க முன்னாள் செயலாளர் சரிகா உட்-பட பலர் பேசினர்.

