ADDED : மார் 06, 2026 04:27 AM
அ நிறம் | அளவு
பெருந்துறை: பெருந்துறை கிழக்கு அரசு நடுநிலை பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி கிருத்திபாலா, மாணவர்கள் ஹேமேஷ் மற்றும் தருண் ஆகியோர், நடப்பு கல்வியாண்டில் நடைபெற்ற, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைத் திட்டம் (என்.எம்.எம்.எஸ்.,) தேர்வில், அதிக மதிப்பெண்கள் பெற்றனர்.
இதன் அடிப்படையில் பெருந்துறையில் உள்ள, ஈரோடு மாவட்ட அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகள் என, நான்கு வருடங்கள் அரசு மாதிரி பள்ளியில் படிக்க உள்ளனர்.
