sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிலை வளாகத்தில் நுாலகம் அமைக்க ஆட்சேபித்து மனு

/

சிலை வளாகத்தில் நுாலகம் அமைக்க ஆட்சேபித்து மனு

சிலை வளாகத்தில் நுாலகம் அமைக்க ஆட்சேபித்து மனு

சிலை வளாகத்தில் நுாலகம் அமைக்க ஆட்சேபித்து மனு


ADDED : ஜூலை 19, 2025 01:23 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, :சிவகிரி சுதந்திர போராட்ட தியாகி குமரன் பேரவை துரைசாமி மற்றும் சிலர், ஈரோடு கலெக்டர் அலுவலகம், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியிடம், நேற்று மனு வழங்கி கூறியதாவது:

சிவகிரியில் சுதந்திர போராட்ட தியாகி கொடிகாத்த குமரன் உருவச்சிலையை, வெண்கல சிலையாக அமைத்து தருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்திருந்தார். சிலை வளாகத்துக்குள் நுாலகம் அமைக்க எம்.பி., பிரகாஷ் கூறியுள்ளார். அவ்வளாகம் மிக குறுகியது. படிப்பகம் அமைத்தால் போக்குவரத்து இடையூறு ஏற்படும். அருகே அண்ணா கலையரங்கில் அடிக்கடி அரசியல், பொது நிகழ்வு நடக்கும். படிப்பகம் அமைந்தால் படிப்போருக்கு இடையூறு ஏற்படும்.

கோவிலும் உள்ளதால் திருவிழா உட்பட பிற சமயங்களிலும் ஒலிபெருக்கி, நிகழ்ச்சிகளால் படிக்க இயலாது. சிலை வளாகத்தின் பின்புறம் ஏழைகள் கடை நடத்துவது சிரமமாகும். எனவே டவுன் பஞ்.,க்கு சொந்தமான விசாலமான வேறிடத்தில் நுாலகம் அமைத்தால் பயனுடையதாக இருக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us