/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலை பணியை முடிக்ககோரி ஒரு காலில் நடந்து வந்து மனு
/
சாலை பணியை முடிக்ககோரி ஒரு காலில் நடந்து வந்து மனு
சாலை பணியை முடிக்ககோரி ஒரு காலில் நடந்து வந்து மனு
சாலை பணியை முடிக்ககோரி ஒரு காலில் நடந்து வந்து மனு
ADDED : ஜன 20, 2026 05:53 AM
ஈரோடு: பவானி தாலுகா பெருந்தலையூர் பஞ்., செரையாம்பாளை-யத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் நல்லையன். ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு, ஒரு காலை துாக்கி, ஒரு காலில் நொண்டியடித்-தபடி நேற்று வந்து மனு வழங்கி கூறியதாவது:
கோபி யூனியன் செரையாம்பாளையத்தில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். சாலை சேதமானதால் பல ஆண்-டாக கோரிக்கை மனு வழங்கி நுாதன போராட்டம் நடத்தியதன் விளைவாக, ஒரு பகுதியை மட்டும் சீரமைத்தனர். மறுபகுதியை சீரமைக்காததால் டூவீலரில் கூட மக்கள் செல்ல முடியவில்லை. தவிர சாக்கடை கழிவு நீர் வெளியேற வழியின்றி ஆங்காங்கே தேங்குவதால், கொசு உற்பத்தி அதிகரித்து விட்டது. இவற்றை சீர-மைப்பதை வலியுறுத்தி, நொண்டியடித்தபடி வந்து மனு கொடுத்தேன். இவ்வாறு கூறினார்.

