/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
துாய்மை பணியாளர் மாநகராட்சியில் மனு
/
துாய்மை பணியாளர் மாநகராட்சியில் மனு
ADDED : டிச 31, 2025 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தமிழ்நாடு துாய்மை பணியாளர் சங்க மாநில தலைவர் சண்முகம், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார்.
மனு விபரம்: ஈரோடு மாநகராட்சி இரண்டாம் மண்டலத்தில் பணியின்போது உயிரிழ்நத முருகன் குடும்பத்தாருக்கு, பத்து லட்சம் ரூபாய் நிதி, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும்.
கடந்த ஒரு மாதமாக எஸ்.ஐ.ஆர்., பணி செய்த டி.பி.சி., பணியாளர் உட்பட அனைவருக்கும், தேர்தல் கமிஷன் ஒதுக்கிய நிதியில் இருந்த ஊதியம் மற்றும் கூடுதல் நேரம் வேலை செய்தவர்களுக்கு, கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற அனைவருக்கும் பென்சன், கிராஜுவிட்டி தொகையை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

