ADDED : நவ 26, 2024 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பி.எப்., குறைதீர் கூட்டம்
ஈரோடு, நவ. 26-
வருங்கால வைப்பு நிதி விழிப்புணர்வு மற்றும் குறைதீர் கூட்டம், பெருந்துறை அருகே வாய்க்கால் மேடு நந்தா பொறியியல் கல்லுாரி சேர்க்கை கூடத்தில், நாளை நடக்கிறது.
இதில் காலை, 9:30 முதல் மதியம், 1:00 மணி வரை சந்தாதாரர்களுக்கும், மதியம், 2:00 முதல் மாலை, 5:30 மணி வரை தொழிலதிபர்கள், விலக்களிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி மற்றும் தொழிலாளர் காப்பீடு குறித்த குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்கலாம்.

