ADDED : மே 26, 2026 04:35 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு, சித்தோடு கங்காபுரத்தில் உள்ள ரித்திக் சைசிங் மில்லில், மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் பி.எப்., குறைதீர் கூட்டம் நாளை நடக்க உள்ளது. காலை, 9:30 முதல் மதியம், 1:00 மணி வரை சந்தாதாரர்களுக்கும், மதியம், 2:00 முதல் மாலை, 5:30 மணி வரை
தொழிலதிபர்கள், புதிதாக நிறுவப்பட்ட நிறுவனம், தொழிற்சங்கத்தினருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி மற்றும் தொழிலாளர் காப்பீடு தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்கலாம்.
