/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நுாறு நாள் திட்டத்தில் வேலை கேட்டு மறியல்
/
நுாறு நாள் திட்டத்தில் வேலை கேட்டு மறியல்
ADDED : ஜூலை 27, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: அம்மாபேட்டை யூனியன் பூனாச்சி பஞ்சாயத்தில், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு, 15 நாட்களாக வேலை வழங்க-வில்லை.
இதுகுறித்து பஞ்., நிர்வாகத்திடம் முறையிட்டும் பதில் இல்லாததால், அந்தியூர்-அம்மாபேட்டை ரோட்டில் நத்தமேடு பிரிவு என்ற இடத்தில், 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள், நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். எஸ்.எஸ்.ஐ., கருப்பணன், பி.டி.ஓ., ராதமாணி பேச்சுவார்த்தை நடத்தினர். அனைத்து பணியாளர்களுக்கும் வேலை வழங்குவதாக உறுதிய-ளிக்கவே, மறியலை கைவிட்டனர்.

