/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வீடுகளுக்கு குழாய் மூலம் காஸ் வினியோகம் துவக்கம்
/
வீடுகளுக்கு குழாய் மூலம் காஸ் வினியோகம் துவக்கம்
ADDED : பிப் 10, 2026 08:47 AM
ஈரோடு: வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் காஸ் வினியோகிக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் குழாய் அமைத்து, காஸ் வினியோகம் செய்கிறது.
இதில் ஈரோடு மாநகரில் நசியனுார், பெருந்துறை சாலை பகுதியில் குழாய் பதிக்கும் பணி, காஸ் கணக்கீடு கருவி பொருத்தும் பணி நடந்து வருகிறது. மாவட்டத்தில் முதன்முறையாக நசியனுார் டவுன் பஞ்., பெரியார் நகரில் வீடுகளுக்கு குழாய் மூலம் காஸ் வினியோகிக்கும் பணி நேற்று துவங்கியது. இதில், 25 வீடுகளுக்கு மட்டும் இணைப்பு வழங்கி உள்ளனர். இந்தாண்டு இறுதிக்குள், 10,000 வீடுகளுக்கு காஸ் இணைப்பு தரவும் இலக்கு நிர்ணயித்துள்ளதாக, நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

