ADDED : நவ 01, 2025 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்,மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, பவானி உட்கோட்டம் சார்பில், பனை விதை நடவுப்பணி, இரட்டைக்கரட்டில் நேற்று தொடங்கியது. ஈரோடு கோட்ட பொறியாளர் ரமேஷ்கண்ணா தொடங்கி வைத்தார்.
பவானி-அந்தியூர்-செல்லம்பாளையம் நெடுஞ்சாலை ஓரத்தில், 5,௦௦௦ பனை விதை நடவு செய்யப்படும் என்று தெரிவித்தனர். உதவி கோட்ட பொறியாளர் சேகர், உதவிப் பொறியாளர் பழனிவேலு, திறன்மிகு உதவியாளர்கள் திருமுருகன், மாரியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

