/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பறிமுதல்
/
பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பறிமுதல்
ADDED : டிச 22, 2024 03:36 AM
காங்கேயம்: வெள்ளக்கோவில் நகராட்சி கடைகளில் தடை செய்யப்பட்ட கேரி பேக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்-டது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகராட்சி பகுதியில், வணிக நிறுவனங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கப், கேரி பேக்குகள் விற்கப்படுகிறதா என்று, நகராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்-தனர். இதில், 20 கடைகளில், 9 கிலோ கேரிபேக்குகள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது.நகராட்சி பகுதியில் வணிக நிறுவனங்களில் ஒரு முறை பயன்ப-டுத்தக்கூடிய கேரி பேக், பிளாஸ்டிக் டம்ளர் விற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதனால் மழைக்காலங்களில் வடிகால்களில் பிளாஸ்டிக் கழிவு தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து துணிப்பை மற்றும் சணல் பையை பயன்-படுத்தலாம் என்றும், நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.