/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிளஸ் 2 விடைத்தாள் திருத்த 3 மையம்
/
பிளஸ் 2 விடைத்தாள் திருத்த 3 மையம்
ADDED : மார் 08, 2026 07:59 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த, மூன்று மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
பிளஸ்
2 பொதுத்தேர்வு கடந்த, 2ம் தேதி தொடங்கி நடந்து வரு-கிறது. ஈரோடு
மாவட்டத்தில், 109 மையங்களில், 23,307 மாண-வ--மாணவியர், 669
தனித்தேர்வர் எழுதுகின்றனர். இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு
விடைத்தாள் திருத்த, ஈரோடு மாவட்-டத்தில் மூன்று மையம்
அமைக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் கார்மல் மெட்ரிக் பள்ளி, கிறிஸ்து ஜோதி
மேல்நிலைப்பள்ளி, கோபி அமலா மெட்ரிக் பள்ளி ஆகியன விடைத்தாள்
திருத்தும் மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் பிளஸ்
2, பிளஸ் ௧ துணைத்தேர்வு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக புகார்,
கருத்து, சந்தேகம் இருந்தால், கட்டுப்பாட்டு அறையை, 94983-83075 அல்லது
94983-83076 என்ற எண்களில், ஏப்.,6 வரை காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00
மணி வரை, மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

