ADDED : மே 08, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:அந்தியூர், கிட்டாம்பட்டி பகுதியை சேர்ந்த சுப்பிரணியம் மகன் மதுபாலன், 25, கார் மெக்கானிக். இவர், 17 வயது சிறுமியை திருமணம் செய்து, குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
தகவல் அறிந்த குழந்தைகள் நலக்குழுவினர், பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, மதுபாலன் மீது போக்சோ மற்றும் குழந்தைகள் திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.