ADDED : ஏப் 19, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : லோக்சபா தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை நிறைவடைந்தது.
அதன்பிறகு வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள், தொகுதிக்கு சம்மந்தமில்லாத அரசியல் கட்சியினர், மாவட்டத்தில் தங்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இதன்படி விதி மீறி யாராவது தங்கியுள்ளனரா என்பதை கண்காணிக்க, போலீசாருக்கு ஈரோடு எஸ்.பி., ஜவகர் உத்தரவிட்டிருந்தார்.இதனால் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர். திருமண மண்டபங்களில் அரசியல் கட்சியினர் தங்கி உள்ளனரா? என்று ரோந்து சென்று கண்காணித்தனர்.இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'மாவட்டத்தில், 96 தங்கும் விடுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் சந்தேகத்துக்கு இடமாக யாரும் தங்கவில்லை' என்றனர்.

