sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அறுவடைக்கு தயாராக பொங்கல் கரும்பு

/

அறுவடைக்கு தயாராக பொங்கல் கரும்பு

அறுவடைக்கு தயாராக பொங்கல் கரும்பு

அறுவடைக்கு தயாராக பொங்கல் கரும்பு


ADDED : டிச 19, 2025 07:55 AM

Google News

ADDED : டிச 19, 2025 07:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு பி.பி.அக்ரஹாரம் அடுத்த பேரேஜ் அருகில் உள்ள விவசாய நிலங்களில் கரும்பு விளைச்சல் அதிகரித்து, அறுவடைக்கு தயாராக உள்ளது.

இதுகுறித்து விவசாயி சின்னதுரை கூறியதாவது: இப்பகுதியில், 300 ஏக்கர் விவசாய நிலத்ததில், காவிரி ஆற்று பாசனம் மூலம் விவசாயம் செய்து வருகிறோம். பொங்கல் பண்டிகைக்கு கரும்பு விளைவிக்கும் வகையில், கடந்த சித்திரை மாதம் கரும்பு பயிரிடப்பட்டது. ஏக்கருக்கு, 20,000 கரும்பு விளைகிறது. இதற்கு, 2.50 லட்சம் ரூபாய் செலவாகிறது. தற்போது அனைத்து பகுதிகளிலும், 5 முதல், 8 அடி உயரம் வரை கரும்பு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.

ஜனவரி முதல் வாரத்தில் அறுவடை துவங்கப்படும். இரண்டு நாட்களுக்கு முன், அரசு அதிகாரிகள் நேரில் வந்து கணக்கெடுத்து சென்றனர். வியாபாரிகளும் பார்வையிட்டனர். விலையை பொறுத்தவரை அரசு தரப்பில் வண்டிக்கு, 9,200 ரூபாயும், வியாபாரிகள், 10,000 ரூபாயும் தருகின்றனர். இதில் ஆட்க்கூலி செலவு, 1,300 ரூபாய். விளைச்சலின் போது மாவு பூச்சி தாக்குதல் ஏற்பட்டு, இப்பகுதியில் மட்டும், 10 ஏக்கருக்கான கரும்பு பாதித்துவிட்டது.

இதேபோல் விலைவாசி உயர்வு, கூலி உயர்வு போன்ற பல்வேறு பிரச்னையால், கரும்பு விவசாயிகளுக்கு, அரசு கொடுக்கும் விலை கட்டுபிடியாவதில்லை. எனவே, 9,200 ரூபாய் என்பதை 10,000 ரூபாயாக அரசு உயர்த்தி கொடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us