ADDED : செப் 12, 2025 02:02 AM
அ நிறம் | அளவு
பவானி, அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு காற்றுடன் மழை பெய்தது. இதில் மூணாம்சாவடி பகுதியில் சாலையோர மரக்கிளை முறிந்து கம்பி மீது விழுந்ததில் இரண்டு மின் கம்பம் உடைந்தது.
இதனால் அப்பகுதியில் இரவு முழுவதும் மின்சாரம் தடைபட்டது. மர கிளைகளை நேற்று வெட்டி அகற்றிவிட்டு, இரண்டு கம்பங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு, 15 மணி நேரத்துக்கு பிறகு மின் வினியோகம் கிடைத்தது.
