/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கார்த்திகை தீபம் ஏற்ற முன்னேற்பாடு பணி
/
கார்த்திகை தீபம் ஏற்ற முன்னேற்பாடு பணி
ADDED : டிச 03, 2025 07:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்:காங்கேயம்
அருகே சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், ஆண்டு தோறும்
கார்த்திகை தீப திருநாளை ஒட்டி மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.
கோவில் ராஜகோபுரத்தின் முன்பு மஹா தீபம் ஏற்ற வசதியாக கம்பம்
வைக்கப்பட்டுள்ளது.
இதில் ஏறி செல்வதற்காக ஏணி வசதியும்
செய்யப்பட்டுள்ளது. கம்பத்தின் மீது வைக்கப்படும் தீபத்துக்கான
திரி மற்றும் எண்ணெய் கொண்டு செல்வது உள்ளிட்ட ஆயத்த பணி நேற்று
நடந்தது. தோரணங்கள், வாழை மரம் கட்டி கம்பம் அலங்கரிக்கப்பட்டது.
இன்று மாலை, 6:00 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும் என்று, கோவில்
நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.ரூ.4 லட்சத்துக்கு பாக்கு விற்பனை

