sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பிரதமர் பாதுகாப்பு பணிக்கு செல்லாத ஏட்டு, எஸ்.எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்

/

பிரதமர் பாதுகாப்பு பணிக்கு செல்லாத ஏட்டு, எஸ்.எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்

பிரதமர் பாதுகாப்பு பணிக்கு செல்லாத ஏட்டு, எஸ்.எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்

பிரதமர் பாதுகாப்பு பணிக்கு செல்லாத ஏட்டு, எஸ்.எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்


ADDED : நவ 20, 2025 01:49 AM

Google News

ADDED : நவ 20, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, பிரதமர் பாதுகாப்புக்கு பணிக்கு செல்லாத, எஸ்.எஸ்.ஐ. மற்றும் ஏட்டு ஆகியோர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

பிரதமர் மோடி கோவை வருகையை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட போலீசார் கோவைக்கு பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பவானி போக்குவரத்து எஸ்.எஸ்.ஐ., சந்திரசேகர், அந்தியூர் போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு சார்லஸ் ஆகியோர் கடந்த, 17ல் கோவையில் பணி ஒதுக்கீடு செய்யும் அதிகாரி முன் ஆஜராகி இருக்க வேண்டும்.

ஆனால், ஒருவர் கோவையில் காரில் சீருடையுடன் சுய நினைவு இழந்த நிலையிலும், மற்றொருவர் சுய நினைவு இழந்த நிலையில் சாலையிலும் கிடந்துள்ளனர். இதை மொபைல் போனில் படம் எடுத்த பொதுமக்கள், போலீஸ் தலைமைக்கு தகவல் தெரிவித்தனர். இவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது உறுதியானது. இதையடுத்து இருவரையும், ஈரோடு ஆணைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படைக்கு மாற்றி, ஈரோடு மாவட்ட எஸ்.பி., சுஜாதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.






      Dinamalar
      Follow us