ADDED : டிச 24, 2024 07:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: ஈரோடு மாவட்ட சிறை கோபியில் உள்ளது. இங்கு சில நாட்க-ளுக்கு முன், இரு கைதிகளிடம், மொபைல்போன், சார்ஜர் பறி-முதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இரு கைதிகள் மீது, வழக்குப்பதிவு செய்தனர். அதில் ஒருவர் பிளேடை தின்று விட்-டதால், கோவை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில் மாவட்ட சிறையில் இருந்த, 20 கைதிகள், கோவை மத்திய சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்-டனர். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நீண்ட நாட்களாக சிறையில் உள்ள கைதிகள் இடமாற்றம் செய்-யப்படுவர். அந்த வகையில், 20 பேர் கோவைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்' என்றார்.