/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மலைக்கோவில் பாதையில் தனியார் வாகனங்களுக்கு தடை
/
மலைக்கோவில் பாதையில் தனியார் வாகனங்களுக்கு தடை
ADDED : பிப் 04, 2025 05:51 AM
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச தேரோட்ட ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், சென்னிமலை யூனியன் அலுவல-கத்தில் நேற்று நடந்தது. ஈரோடு ஆர்.டி.ஓ., ரவி தலைமை வகித்தார்.
பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், பெருந்துறை தாசில்தார் செல்வகுமார், சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் செயல் அலு-வலர் சரவணன் முன்னிலை வகித்தனர். காவல், போக்குவரத்து, தீயணைப்பு,
வருவாய், சுகாதாரம், போக்குவரத்து காவல், மின்வா-ரியம், நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள்
கலந்து கொண்டனர். 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை மலை கோவி-லுக்கு, பக்தர்கள் அதிகம் செல்வார்கள்.
மலைப்பாதையில் சாலை மேம்பாட்டு பணி நடப்பதால், தனியார் வாகனங்களை அனும-திக்காமல், தேவஸ்தான
பஸ்களை அதிகம் இயக்க முடிவு செய்-யப்பட்டது. திருவிழாவில் ஆபத்தான பெரிய ராட்டினம் அமைக்க கூடாது. மகா தரிசனம் நடக்கும் 15ம் தேதி டவுன்
பகுதியில் நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றம் செய்ய, தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கவும்
கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

