/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
/
விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
ADDED : ஜன 26, 2025 04:12 AM
ஈரோடு: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரிடையே பேச்சு, சுவரொட்டி வடிவில் சுவர் இதழ் போட்டி, பாட்டு போட்டி, கடிதம் எழுதும் போட்டி, மகளிர் குழுவினருக்கு கோலப்போட்டி, வினாடி - வினா போட்டி ஈரோட்டில் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பரிசு, சான்றிதழ் வழங்கினார்.
தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் சிறப்பாக பணியாற்றிய கல்லுாரி மாணவ, மாணவியர், பொறுப்பு அலு-வலர், ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர், தேசிய கல்விக்குழு ஒருங்கிணைப்பாளர், மாணவ துாதுவர்களுக்கு சான்றிதழ் வழங்-கப்பட்டது. வாக்காளர்களை கவுரவிக்கும் வகையில் மாற்றுத்திற-னாளிகள், பெண் வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள், மூத்த வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோருக்கு பொன்-னாடை போர்த்தி கவுரவித்தனர்.

