ADDED : மார் 14, 2026 04:54 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பகுதியில், 6.33 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகள் திறக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், 62 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய அதிநவீன துண்கதிர் பிரிவு (எக்ஸ்ரே) மக்கள் பயன்பாட்-டுக்கு, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, நேற்று தொடங்கி வைத்தார்.
குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில், 2.82 கோடி ரூபாயில் கட்டப்பட்ட பிளஸ் 2 வகுப்பறை கட்டடம், சித்தோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 2.35 கோடி ரூபாயில் கட்டப்பட்ட, 10 வகுப்பறை கொண்ட கட்டடம் பணிகள் முடிந்து நேற்று திறக்கப்பட்டது. நிகழ்வில் கலெக்டர் கந்தசாமி, எம்.எல்.ஏ., சந்திரகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணை பதி-வாளர் கந்தராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
