/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திருட்டு வழக்கில் வாலிபருக்கு காப்பு
/
திருட்டு வழக்கில் வாலிபருக்கு காப்பு
ADDED : அக் 26, 2025 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை, சென்னிமலை, முகாசிப்பிடாரியூர் ஊராட்சி, தமிழ் நகரை சேர்ந்தவர் காமாட்சி. இவரது வீட்டில் இரண்டு மாதங்களுக்கு முன் பூட்டை உடைத்து திருட்டு போனது. அவர் புகாரின்படி விசாரித்த சென்னிமலை போலீசார், நான்கு பேர் ஈடுபட்டதை கண்டறிந்தனர். இது தொடர்பாக மதுரையை சேர்ந்த சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கில் மதுரை, வில்லாபுரம், கிழக்குத்தெரு பூவலிங்கம், 35; என்பவரை நேற்று கைது செய்தனர். பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

