/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து போராட்டம்
/
எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து போராட்டம்
எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து போராட்டம்
எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து போராட்டம்
ADDED : நவ 25, 2024 02:26 AM
காங்கேயம்: கோவை, இருகூரிலிருந்து கர்நாடகா மாநிலம் தேவனஹள்ளி வரை பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், எண்ணெய் கொண்டு செல்லும் குழாய் அமைக்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. விவசாய நிலங்கள் வழியாக செல்வதால், பல மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவ்வப்-போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காங்கேயம் வட்டம் வீரணம்பாளையம், வீரசோழ-புரம், மேட்டுப்பாளையம் கிராம விவசாயிகள், குழாய் பதிப்ப-தற்கு எதிர்ப்பு தெரிவித்து, வீரணம்பாளையம் அருகே ஒரு விவசாய தோட்டத்தில் பி.ஏ.பி., பாசனத்தலைவர் முத்துராஜ் தலைமையில், நேற்று தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடு-பட்டனர். இந்த திட்டத்தை சாலையோரம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். போராட்டத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.