ADDED : அக் 08, 2024 03:55 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளர் சங்கம் சார்பில், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிளை செயலாளர் பெரோஸ் ரகும் தலைமை வகித்தார். விடுப்பு அளிக்க அனுமதிக்காததற்கும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரத்தில் பணி செய்யாவிடில் மெமோ வழங்குவதை கண்டித்தும், ௨௫ பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
